கோட்டாவின் எஞ்சிய கால ஆட்சியை எச்சில் ஆசைகளுக்காக பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம் !

கோட்டாவின் எஞ்சிய கால ஆட்சியை எச்சில் ஆசைகளுக்காக பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம் !

அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்
தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்லவைக்க வேண்டும்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நாளாந்த தொழிலாளர்கள் வாழும் இந்தப் பிரதேசத்தில் பல பிரச்சினைகள் உள்ளன.

அயல்நாட்டு மீனவர்களின் அத்து மீறல்களால் அதிகம் பாதிக்கப்படுவது மன்னார் மாவட்டமே.

இது குறித்து, எமது வேட்பாளர் சஜித்திடம் விளக்கியுள்ளோம்.

அவரது ஆட்சியில் இதற்கு தீர்வு கிடைக்கும்.

சமூகப் பிரச்சினைகளை சில்லறைக்காசுச் சொகுசுகளால் தீர்க்கவே முடியாது.

வாக்குகளில்லாத சிலர் அவரவர் வாய்ப்புகளுக்காகவே ரணிலை ஆதரிக்கின்றனர்.

விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் எஞ்சிய கால ஆட்சியை, எச்சில் ஆசைகளுக்காகப் பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம்.

பரந்தும் விரிந்தும் கிடக்கும் வடமாகாண பூமியில், சுற்றுலாத் தளங்களை உருவாக்கி, வாழ்வாதரத்தைப் பலப்படுத்த சஜித் பிரேமதாசவைப் பலப்படுத்துங்கள்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )