ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாதம் இன்று !

ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாதம் இன்று !

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொது விவா
தம் இன்று நடைபெறவுள்ளது என்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் (PAFFREL ) அமைப்பின் நிறைவேற்று
பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

‘மார்ச் 12 மூவ்மென்ற்’ அமைப்பின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த
விவாதம் இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி அனைத்து முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நேரலை விவாதத்தில் சுயேச்சையாக போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸ, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ கூட்டணியின் திலித் ஜயவீர ஆகியோர் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, ‘தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர
குமார திஸநாயக்க உட்பட ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத் துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால்,அவர்கள் வருகையை உறுதிப்படுத்த வில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பது கடினம் என அவரின்
தரப்பினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்’ என்று பவ்ரல் அமைப்பின் தலைவர்தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )