நாமலுக்கு எதிரான வழக்கு பெப்ரவரியில் விசாரணைக்கு

நாமலுக்கு எதிரான வழக்கு பெப்ரவரியில் விசாரணைக்கு

பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1.5 கோடி ரூபாய் இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னி லையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வாறு
அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ஷ சட்டவிரோதமாக சம்பாதித்த 1.5 கோடி ரூபாய் முதலீடு செய்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த முறைப்பாட்டுக்கான விசாரணைகள் தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )