வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஒருவர் கைது

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஒருவர் கைது

மூதூர் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவிலுள்ள தபால் வாக்களிப்பு நிலையத்தில் அங்கு பணிபுரியும் சாரதி ஒருவர் வாக்குச் சீட்டை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தபால் வாக்குச்சாவடியில் சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கடமையாற்றிய டிப்போ பிரதி முகாமையாளர் மொஹமட் ஹனிபா அன்வர் சதாத், மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )