சஜித்துக்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் ; ஆட்கள் இன்றி இரத்து

சஜித்துக்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் ; ஆட்கள் இன்றி இரத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஒருவர் கூட சமூகம் அளிக்காத நிலையில் கூட்டம் கைவிடப்பட்டது.

இப்  பிரச்சாரக் கூட்டம் வடமராட்சி  குஞ்சர்கடை கொலின்ஸ்  விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று (10) முற்பகல் 10. 00 மணிக்கு இடம்பெறும் என  அறிவிக்கப்பட்டது. 

 பிரச்சார கூட்டத்திற்கு சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி, மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 10 மணிக்கு பிரச்சார கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. அங்கு இசை நிகழ்வு கதிரைகள் மட்டும்   பார்வையாளராக இருக்க  இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

ஆனால் 11.00 மணிக்கு கூட்டம் எடும்பெறும் 12 .00 மணிக்கு இடம்பெறும் என மாற்றி மாற்றி கூறிய நிலையில்  பிற்பகல் 2.00 மணி ஆகியும் கூட்டத்துக்கு ஒருவர் கூட சமூகமளிக்காக நிலையில் பிரச்சாரக் கூட்டம் கைவிடப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் ஐவர், பாதுகாப்புக்கு வருகை தந்த இருபது வரையான  பொலிஸார் ஊடகவியலாளர்கள் சிலர் மட்டுமே அங்கு காணப்பட்டனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )