விஜித ஹேரத் – சந்தோஷ் ஜா சந்திப்பு

விஜித ஹேரத் – சந்தோஷ் ஜா சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையில் நேற்று (30) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
 
கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரந்த ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
 
அத்துடன், இருநாடுகளினதும் கலாசார நட்புறவுக்கு மேலும் வலுசேர்க்கும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )