10 கோடி ரூபாய் பெறுமதியான போதை பொருள் மீட்பு

10 கோடி ரூபாய் பெறுமதியான போதை பொருள் மீட்பு

சுமார் 10  கோடி ரூபாய் பெறுமதியான மெத்தம்பட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்று,  விமான நிலையத்துக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதையடுத்து,  சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் குறித்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவின் குவாத்தமாலா மாநிலத்தில் இருந்து குறித்த பொதி மிகவும் நூதனமான முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

பொலன்னறுவை ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விவசாயி ஒருவரின் முகவரிக்கு குறித்த போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொதியை விவசாயி எடுக்க வந்த போது, ​​பொதியை திறந்து பரிசோதித்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.  

03 கிலோ 101 கிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் இந்த பொதியில் இருந்துள்ளது.கைது செய்யப்பட்ட விவசாயி மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )