போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் 1,000ற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நால்வரும் திங்கட்கிழமை (10) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இதன்போது கைது செய்யப்பட்ட நால்வரில், மூவரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வாளுடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை மேலும் 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய, பொலிஸார்  அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )