மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழப்பு

மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழப்பு

மழை காரணமாக நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மரத்தடியில் நின்ற பெண்னெருவர் மீது மரம் விழுந்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முறுவ கபியவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான நிசன்சலா சரோஜனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆய்வகப் பணியாளரான இவர் இன்று (22) மாதம்பே, கல்முறுவிலிருந்து சிலாபம் பகுதியிலுள்ள ஆய்வுகூடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது குளியாப்பிட்டிய பிரதான வீதியில் வைத்து இவ்விபத்தில் சிக்கியுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )