
ஆளுங்கட்சியில் அழைப்பு வந்தால் கூட இணையத்தயாரில்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி தன்னை அழைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்புவந்தால் கூட இணையத்தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” இடதுசாரி மூகமூடியை அணிந்துக்கொண்டு லிபரல் வழியில் அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனால்தான் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்காகூட அழைப்பு விடுத்துள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம். தற்போது அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.” என தெரிவித்துள்ளார்.