![விரைவுபடுத்தப்படும் அவிசாவளை – கஹவத்தை ரயில் பாதை நிர்மாணம் விரைவுபடுத்தப்படும் அவிசாவளை – கஹவத்தை ரயில் பாதை நிர்மாணம்](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/MediaFile-4.jpeg)
விரைவுபடுத்தப்படும் அவிசாவளை – கஹவத்தை ரயில் பாதை நிர்மாணம்
அவிசாவளையில் இருந்து கஹவத்தை வரையிலான முன்மொழியப்பட்ட ரயில் பாதையின் நிர்மாணத்தை விரைவுபடுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதித் தலைமைப் பொறியாளர் (வீதிகள்) பி.ஜே. பிரேமதிலக்க இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ரயில் பாதையின் முதல் கட்டம் அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டம் இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையிலும், மூன்றாம் கட்டம் எம்பிலிப்பிட்டிய, சூரியவெவ மத்தள ஊடாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையிலும் நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரேமதிலக மேலும் தெரிவித்தார்.
இதில் அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையிலான பகுதியின் அவிசாவளையிலிருந்து குருவிட்ட வரையில் தற்போது அளவீடுகள் முடிக்கப்பட்டுள்ளன.