பாடசாலை மீது வெடிகுண்டு தாக்குதல் ; 37 பேர் பலி

 பாடசாலை மீது வெடிகுண்டு தாக்குதல் ; 37 பேர் பலி

இஸ்ரேலுக்கும், ஹமாஸ்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பாடசாலையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.

இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொ ய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )