மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 14 யாத்திரிகர்கள் உயிரிழப்பு : 17பேர் மாயம்

மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 14 யாத்திரிகர்கள் உயிரிழப்பு : 17பேர் மாயம்

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரை சென்ற 14
யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கா வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க இறந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சவுதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணாமல் போன 17 யாத்திரிகர்களை தேடும் பணியில் சவுதி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரை சென்ற 6 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )