மாளிகைக்காடு – சாய்ந்தமருதில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை

மாளிகைக்காடு – சாய்ந்தமருதில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை

தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் இன்று (17) கொண்டாடி வருகிறார்கள்.

அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

மேலும், சாய்ந்தமருது அல்- அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை, கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை, அப்பிள் தோட்ட திடலில் இடம்பெற்றது.

இன்று முஸ்லிங்கள் மகிழ்ச்சியாக தொழுகையில் ஈடுபட்டிருந்ததுடன், தொழுகை முடிந்தவுடன் தமது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். அதுமட்டுமின்றி காலமான தமது உறவுகளுக்காக ஜனாஸா மையவாடிகளில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

நூருல் ஹுதா உமர்
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )