திடீரென மயங்கிய மாணவன் உயிரிழப்பு

திடீரென மயங்கிய மாணவன் உயிரிழப்பு

பாடசாலை மாணவன் ஒருவன் வீதியில் நடந்து சென்ற போது மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (16) யாழ்ப்பாணம் – தெல்லிப்புரம் பகுதியில் பதிவாகியுள்ளது.

தெல்லிப்புரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தவராசா கோபிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் மேலதிக வகுப்புக்களை முடித்துவிட்டு வீடு திரும்பும்வேளையில் தனது நண்பனுடன் கடை ஒன்றுக்கு சென்றபோது.  திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது, வீதியில் வந்த சிலர் குறித்த மாணவனை உடனடியாக வைத்தியாசாலை அனுமதித்த போதிலும் , மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவனின் பிரேத பரிசோதனையின் போது அவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )