கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

மன்னார் – முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் நேற்று (24)  பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மன்னாரில் இருந்து சென்ற தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கும் இடையில் உள்ள  ரயில்வே கடவைப் பகுதியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

 இவ்வாறு உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன்  (வயது-35) இளம் குடும்பஸ்தர் என தெரியவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )