“ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்”

“ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்”

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19-ம் திகதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு 4 பெண்கள் உள்பட 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த கார்டியன் கவுன்சில் 74 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்தது.

6 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை கடந்த 9-ம் திகதி வெளியிட்டது. அதில், முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான், முஸ்தபா பூர்மொஹம்மதி, அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தலைவர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்தும் ஒருவர். இவர் இதற்கு முன்பு 2021-லும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், எதிரியை வெல்வதற்கு இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அழைப்பு விடுத்துள்ளார். ஷியா பண்டிகையான ஈத் அல்-காதிர் விடுமுறையை முன்னிட்டு இன்று (25) உரையாற்றியபோது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )