இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

இலங்கையின் சில பகுதிகளில் இன்றையதினம் (28) இடைக்கிடையே பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

கடற் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )