உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு

உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு

கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த “டெவோன் 05” மீன்பிடி படகிலிருந்த 04 மீனவர்களின் சடலங்களும் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சடலங்கள் அடங்கிய படகு இன்று (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சடலங்கள் கப்பலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதவான் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன எனவும் தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )