அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு !

அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு !

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி அளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த ஒரு பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் வந்ததுடன், T56 துப்பாக்கிகள் இரண்டை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )