க்ளப் வசந்தவின் இறுதி சடங்குக்கு அச்சுறுத்தல்!

க்ளப் வசந்தவின் இறுதி சடங்குக்கு அச்சுறுத்தல்!

அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலத்தை இறுதி அஞ்சலிக்காக பொரளை மலர்சாலையில் வைக்கக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற அழைப்பு ஒன்றினூடாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸாருக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொரளை மலர்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (08) அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்தனர்.

இதில் க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த என்ற வர்த்தகர் உயிரிழந்திருந்தார்.

காயமடைந்தவர்களில் பிரபல பாடகி கே.சுஜீவாவும் உள்ளடங்குகின்றார்.

புதிய வர்த்தக நிலைய (Tattoo Shop) திறப்பு விழாவொன்றில் வைத்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )