ஒலிம்பிக் அரையிறுதியில் அருண இன்று பங்கேற்பு !

ஒலிம்பிக் அரையிறுதியில் அருண இன்று பங்கேற்பு !

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாவது இடத்தைப்பிடித்து தனது சிறந்த காலத்தை வெளியிட்ட அருண தர்ஷன இன்று (06) அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த ஆரம்ப சுற்றில் பங்கேற்ற அருண 44:99 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த ஆரம்ப சுற்றில் பங்கேற்ற 44 வீரர்களில் அருண 17 ஆவது அதிவேகமான காலத்தை பதிவு செய்தார்.

இதன்போது 1997 இல் ஜப்பானின் புக்காகோவில் நடந்த போட்டியில் சுகத் திலகரத்னவுக்கு பின்னர் 400 மீற்றர் ஓட்டப்போட்டியை 45 விநாடிகளுக்கு குறைவான காலத்தில் நிறைவு செய்த முதல் இலங்கை வீரராகவும் அருண பதிவானார்.

முன்னர் 45.30 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்ததே அருணவின் சிறந்த காலமாக இருந்தது.

அதேபோன்று இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் இதுவரை பங்குபற்றிய ஐந்து வீர,வீராங்கனைகளும் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் இலங்கையின் முதல் வீரராகவும் அருண அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதன்படி அருண தர்ஷன பங்கேற்கும் அரையிறுதிப் போட்டி இன்று
இலங்கை நேரப்படி இரவு 11.05மணிக்கு இடம்பெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )