வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை, அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமெனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான
கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

அதேநேரம், தேர்தல் சட்டங்கள் தொடர்பில் அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பானபொலிஸ் உயரதிகாரிகளை அழைத்து, கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )