🛑 Breaking News : ஹரின் பிராண்டோ விசேட உரை
நீதிமன்ற விசேட உத்தரவின் பின்னர் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பிராண்டோ சுற்றுலா அமைச்சகத்தில் இன்று விசேட உரை ஆற்றவுள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். இதனையடுத்து ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.