கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கு இதுவரை 32 வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒகஸ்ட் 15ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென்றும், முன்வைக்கப்படவுள்ள வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனைகளுக்கு காலை 9 மணி முதல் 11.30 மணி வரை குறிப்பிட்ட கால அவகாசம் ஒதுக்கப்பட்டுமென்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பாதுகாப்பு வைப்பு நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், கட்டுப்பணம் செலுத்தவிருக்கும் வேட்பாளர்கள் இம்மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக, கட்டுப்பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )