
சபாநாயகர் மற்றும் குயின் போயோங் இடையில் சந்திப்பு
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி குயின் போயோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற ஒத்துழைப்பு, நிலைபேறான அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம், தொழில்கள் மற்றும் பலதரப்பு ஈடுபாடுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் சீனாவின் உறுதிப்பாட்டுடன் உள்ளதாக குயின் போயோங் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரஸ்பர அபிவிருத்தி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் தயார் நிலையையும் குயின் போயோங் வலியுறுத்தியுள்ளார்.