மறுசீரமைக்கப்பட்ட நீர் குழாய்

மறுசீரமைக்கப்பட்ட நீர் குழாய்

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் நேற்று (17) அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் குழாய் ஒன்றில் மோதியதில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டது.

இந்நிலையில், குறித்த  நீர் குழாயை சீரமைக்கும் பணிகள் இன்று (18) அதிகாலை 4 மணி முதல் முன்னெடுத்து வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (18) மதியம் 12 மணி முதல் சில பிரதேசங்களுக்கு மாத்திரம் நீர் விநியோகிக்க முடியும் எனவும், மாலை 4 மணி முதல் ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)