வெலிக்கடை சிறையில் கைதி மரணம் ; மூன்று சிறைக்காவலர்கள் கைது

வெலிக்கடை சிறையில் கைதி மரணம் ; மூன்று சிறைக்காவலர்கள் கைது

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸார் தெரிவித்தார்.

உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தப்பிச் சென்றதாகவும், பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து குறித்த கைதி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை தாக்கியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )