கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை : எட்டு பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை : எட்டு பேர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஜபோஸ்லேன் பகுதியில் சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை நேற்று முன்தினம் (15) அதிகாலையில் இடம்பெற்றிருந்த நிலையில், கிராண்ட்பாஸ் பொலிஸார் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் நேற்று (16) இரவு வெல்லம்பிட்டி பகுதியில் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கத்திகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர், அவை குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)