சீனாவை அலங்கரிக்கும் இலங்கை கலைஞன்!
இலங்கை கலைஞர் ஒருவர் வெள்ளை இரும்பை பயன்படுத்தி உருவாக்கிய இரண்டு சிற்பங்களை முதன்முறையாக சீனா தனது நகரங்களை அலங்கரிக்க பயன்படுத்தியுள்ளது.
சிற்பி லலித் சேனாநாயக்கவின் இரண்டு குதிரைகள் மற்றும் இரண்டு பறக்கும் பறவைகளின் சிற்பங்களே இவ்வாறு நகர அலங்கரிப்பிற்காக சீனாவால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது சீனாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான சிச்சுவானின் தலைநகரான செங்டுவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.