பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்த நிலையில், வீட்டில் அவர் செல்லமாக வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை 'ஆன்' செய்ததும், அதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததும் தெரிய வந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

Share on

சீனா

peoplenews lka

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. .. Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More

peoplenews lka

பீஜிங் வைத்தியசாலையில் தீ விபத்து!...

சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்... Read More