சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!
சீனாவுடனான எல்லைப்பிரச்சினை நடைப்பெற்று வரும் நிலையில் இந்தியாவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் பல முறை தோல்வி கண்டுள்ளது.
எல்லை பிரச்சினையில் படைகளை குறைக்க வேண்டும் என்று 3 ஆண்டுகளாக இந்தியா கோரிக்கைகளை விடுத்த போதிலும் அதற்கான சரியான நடைமுறைகளை மேற்கொள்ள சீனா உடன்படவில்லை.
எல்லை பிரச்சினைகள் சார்பாக தீர்வு காணும் வகையில், இந்தியா சீனா இராணுவ கொமாண்டர்களுக்கு இடையில் 18ஆவது சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனா இராணுவத்திடம் இந்தியா முன்வைத்த கோரிக்கைகளான டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதியில் சீனப்படைகளை நீக்க வேண்டும் என்பதை சீனா அலட்சியப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.