வங்காள விரிகுடாவில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்!
இந்தியாவின் விசேட பொருளாதார பிராந்தியமான வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பங்களாதேஷ் நாட்டின் கடற்பரப்பில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள Hai Yang Shi You 760 என்ற சீன ஆராய்ச்சி கப்பல் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவுக்கு சொந்தமான இந்த ஆராய்ச்சி கப்பல் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி இரவு மலாக்கா நீரிணை ஊடாக இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதுடன் ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் அருகில் உள்ள கடற்பரப்பில் எரிபொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதக்கவும் குறித்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில், சீனாவின் கப்பலுக்கு இந்தியாவின் விசேட பொருளாதார பிராந்தியத்தில் எவ்வித ஆராய்ச்சியிலும் இடமளிக்க போவதில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.