சீனாவின் உளவு பலூன்கள் குறித்து மீண்டும் கலந்துரையாடல்!
சீனாவின் உளவு பலூன்கள் குறித்து இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் உளவு பலூன் அமெரிக்க விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பில் பல்வேறு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வான் சட்டங்களை மீறி எந்த ஒரு நாட்டின் இறையாண்மையிலும் குறுக்கிடும் செயற்பாடுகள் குறித்து தாம் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.