யாழில் எரிபொருள் நிரப்பும் ஊழியர் மீது வாள்வெட்டு

யாழில் எரிபொருள் நிரப்பும் ஊழியர் மீது வாள்வெட்டு

யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல்களுக்கு உள்ளான நபர், கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி வாள் வெட்டு தாக்குதல் சம்பவம் புதன்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி நகரிலுள்ள கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துன்னாலையை சேர்ந்த இருவர் புதன்கிழமை (21) இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது, ஊழியரை திடீரென கத்தியால் தாக்க ஆரம்பித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்த நெல்லியடி பொலிஸார், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகத்
தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )