புதையல் தோண்டிய 11 பேர் கைது

புதையல் தோண்டிய 11 பேர் கைது

தெரணியகல-ரஸ்னா கந்த பிரதேசத்தில் தொல் பொருட்களைத்
தோண்டிய 11 பேரை, வெடிப்பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 10 கிலோ கிராம் அமோனியா, 42 டெட்டனேட்டர்கள், 22 கம்பி பொருத்தப்பட்ட டிரில் பிட்கள், 24 ஜெலட் நைட் குச்சிகள், 3 கிலோ கிராம் கன்பவுடர் மற்றும் 6 சுருள்கள் சர்வீஸ்த்ரெட் ஆகியவற்றை பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 55 வயதுக்கு
இடைப்பட்டவர்கள் எனவும் தெர ணியகல, கொழும்பு, யக்கல ஜா-எல, பிலியந்தல, களுபோவில, கம்பஹாப போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )