ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

ஜனாதிபதி ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியானது.

இந்த விஞ்ஞாபனத்தின் தொனிப்பொருள் “ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்லும் 5 ஆண்டுகள்” என்பதாகும்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நமது நாட்டை கட்டியெழுப்புவதற்காக எனது கொள்கை பிரகடனத்தை இன்று முன்வைக்கிறேன். என்னால் நிறைவேற்றக்கூடியதை மட்டுமே நான் செய்வதற்கு உறுதியளிக்கிறேன். எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில், நம் நாட்டிற்காக என்னால் முடிந்ததை அர்ப்பணிப்பேன். இந்த நாட்டை நான் மீட்பேன். எனது தலைமையில் எதிர்வரும் ஐந்து வருடங்கள் இலங்கைக்கு வெற்றிகரமான காலமாக அமையும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )