CPL வாய்ப்பை இழந்த இலங்கை வீரர்கள்!

CPL வாய்ப்பை இழந்த இலங்கை வீரர்கள்!

இலங்கை அணியின் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் கரீபியன் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டின் கரீபியன் லீக் தொடரை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் இருவரும் St Kitts & Nevis Patriots அணிக்காக விளையாடவிருந்தனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவ்விரு வீரர்களும் உபாதைக்கு உள்ளாகினர்.

நுவான் துஷார விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக முழு தொடரையும் தவறவிட்டதுடன், ஹசரங்க ஒருநாள் தொடரின் 2ஆது மற்றும் 3ஆது போட்டிகளைத் தவறவிட்டார்.

இதன்படி, ஹசரங்க மற்றும் துஷாராவுக்கு பதிலாக 2 தென்னாபிரிக்க வீரர்களான Tabraiz Shamsi மற்றும் Anrich Nortje ஆகியோரை அழைப்பதற்கு St Kitts & Nevis Patriots அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )