“சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இலங்கையுடனேயே ரணிலுடன் அல்ல”

“சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இலங்கையுடனேயே ரணிலுடன் அல்ல”

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனேயே ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, ரணில் விக்ரமசிங்கவுடன் அல்ல. எனவே, தாம் இல்லை என்றால் நாடு மீண்டும் பாதாளத்துக்கு சென்றுவிடும் என ரணில் கூறுவது முற்றிலும் பொய் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கல்கிசையில் நடந்த பரப்புரை கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அவர், “தற்போது ஆட்சியாளர்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள விரும்புகின்றார்களேதவிர, புதிய வர்த்தகங்களை உருவாக்குவதற்கு விரும்பவில்லை. விருப்பமான இடங்களில் வணிகங்களை ஆரம்பிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உதவி செய்யும். நாம் அரசாங்கத்தை மாற்றுவதற்கு மாறாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே வாய்ப்புக் கோருகிறோம்.

சர்வதேச நாணய நிதியம் ரணிலுடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. அதன் ஒப்பந்தங்கள் அனைத்தும் இலங்கை அரசுடனே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே, தாம் இல்லை என்றால் நாடு மீண்டும் பாதாளத்துக்கு சென்றுவிடும் என ரணில் கூறுவது முற்றிலும் பொய்யான கருத்தாகும்” என
தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )