“தேர்தலில் அநுரகுமாரவுக்கு60 வீத வாக்குகள் கிடைக்கும்”

“தேர்தலில் அநுரகுமாரவுக்கு60 வீத வாக்குகள் கிடைக்கும்”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என்று ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் இந்த வாக்கு வீதம் அதிகரிக்கும். கருத்துக் கணிப்புகளை விடவும் வாக்கு வீதம் அதிகமாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் “இம்முறை ஜனாதிபதித் தேர் தல் என்பது பல பிரிவினருக்கான போட்டி அல்ல. திருடர்களுக்கும் நல்லவர்களுக்குமான போட்டியாகும். மக்கள் தமது தெரிவை சரியாகத் செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

சஜித் மற்றும் ரணிலின் மேடையில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள். அதனால்
தான் அங்கும் இங்கும் மாறிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கென கட்சி இல்லை. கொள்கை இல்லை. எஞ்சியுள்ளது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அதனால் மக்கள் இலகுவாக தமது தெரிவை மேற்கொள்ள முடியும். அநுர 60 வீத வாக்குகளை பெறுவார். எதிர்காத்தில் இந்த வீதம் இன்னும் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )