வீடு வீடாக பிரச்சாரம் செய்வதை தடுக்க பொலிஸாருக்கு  உத்தரவு  -தேர்தல் ஆணைக்குழு

வீடு வீடாக பிரச்சாரம் செய்வதை தடுக்க பொலிஸாருக்கு உத்தரவு -தேர்தல் ஆணைக்குழு

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருவதாக ஏராளமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் இதுபோன்ற பிரச்சாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று(4) உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )