வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவு

வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் 14 ஆம் திகதியும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )