உணவுக்காக அயலவர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள்

உணவுக்காக அயலவர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள்

நாட்டில் உள்ள 4 குடும்பங்களில் 1 குடும்பம் அயலவர்களிடம் இருந்து பெறப்படும் உணவையே நம்பியிருப்பதாக குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்ட போதே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் 3 குடும்பங்களில் 1 குடும்பம் சமையல் செய்வதையும் குறைத்துள்ளது. அதேநேரம், அவற்றின் நுகர்வு குறைவாக உள்ளது. உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் மூன்றாம்
காலாண்டில் 24 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )