கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் பத்து வருடங்களுக்கு நெருக்கடி !

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் பத்து வருடங்களுக்கு நெருக்கடி !

உலகில் வங்குரோத்து நிலைக்குச் சென்ற எந்தவொரு ஒரு நாடும் இலங்கைப்போன்று ஒன்றரை வருடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும் அது ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே முடிந்துள்ளதுள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது அதிசயம், அற்புதம் என சர்வதேசம் பாராட்டும் நிலையில் நாட்டு மக்கள்
முக்கியமான இந்த தருணத்தில் கிடைத்துள்ள வாய்ப்பை இழந்து விடக்
கூடாது. அவ்வாறு இழந் தால் மேலும் பத்து வருடங்களுக்கு நாட்டில் நெருக்கடி
நிலையே தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவால் இந்த நாட்டை ஒருபோதும் நிர்வகிக்க முடியாது என்பதை
உணர்ந்தே நான் இம்முறை தேர்தலில் சரியான தீர்மானத்தை எடுத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தேன்.

நாட்டு மக்கள் அனைவரும் தமது எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியம் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )