அனைத்து தேர்தல் பிரசாரங்களும்18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

அனைத்து தேர்தல் பிரசாரங்களும்18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம்திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது ஆதரவாளர் தொடர்பான பிரசாரநடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அரச அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு
பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு ஆறு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 48 மணிநேரத்துக்குள் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேண்டுமெனவும் தேர்தல்கள்ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )