மக்களைப் பாதுகாத்தவரிடமே நாட்டை ஒப்படைக்கவேண்டும்

மக்களைப் பாதுகாத்தவரிடமே நாட்டை ஒப்படைக்கவேண்டும்

நாட்டை மீட்டு மக்களை பாதுகாத்தவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டியது எமது கடமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தேர்தலில் பொதுமக்கள் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடையச் செய்வார்கள். தேர்தல் மேடைகளில் நாம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டவர்கள் அல்லர். நாம் மகிந்த ராஜபக்ஷ தரப்பினர். ஆனாலும் நாம் தற்போது ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த நாட்டை மீண்டும் ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம்.

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தரப்பத்தில் நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவரிடம் கூறினோம். அவர் அதற்கு பின்வாங்கினார். நாட்டை பொறுப்பேற்க வில்லை.

அதேபோல் அநுரகுமாரவுக்கு அழைப்பு விடுத்தோம் அவரும் நாட்டை பொறுப் பேற்க தயங்கினார். அன்று நாட்டை பொறுப் பேற்க ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே நாட்டை பொறுப் பேற்க முன்வந்தார்.

இன்று கட்டம் கட்டமாக நாட்டின் இயல்பு நிலையை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். எனவே நாட்டை மீட்டு மக்களை பாதுகாத்தவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டியது எமது கடமையாகும்” என தெரிவித்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )