தேர்தல் பிரசார பணியில் பாடசாலை மாணவர்கள்

தேர்தல் பிரசார பணியில் பாடசாலை மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத் தில் தேர்தல் வன்முறை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.

இதேவேளை, காத்தான்குடி பிரதே சத்தில் பாடசாலை மாணவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் – கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாடளாவிய ரீதியில் கடந்த 14 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறை தொடர்பில் 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் , “ ஜனாதிபதித் தேர்தல் தொடர் பில் அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து கபே அமைப்பு 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரு கின்றது. இதுவரை கபே அமைப் புக்கு 934 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றமை தொடர்பாக அவதானிக்க கூடியதாகவுள்ளது.

2015, 2019 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது சுமுகமான களநிலவரம் காணப்பட்டாலும் கடந்த 8ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரசாரம், அரச சொத்து துஷ்பிரயோகம் போன்ற முறைப்பாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன.

8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வன் முறைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் சமூகவலைத்த ளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரசாரங்களை வீடியோ பதிவுகள் போலி முகநூல் மற்றும் வட்சப் ஊடாகவும் பதிவுகள் இடப்பட்டுள்ளன.

இவ்வாறான செயல்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடியது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதே சங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்தபோதிலும் இதுவரை எந்தவொரு பெரும் வன்முறை களும் இடம்பெறவில்லை, என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )