அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் சூனியமாக்கப்படும் !

அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் சூனியமாக்கப்படும் !

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படும்பட்சத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது ஏதேனுமொரு வாக்களிப்பு நிலையத்திலோ அல்லது நிலையங்களிலோ அசம்பாவித நிலைமை ஏற்படுமாயின் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் சூனியமாக்கப்படும்.

அந்த தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும்வரை நாடளாவிய ரீதியிலான இறுதி தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படுமெனவும், அவர்
குறிப்பிட்டார்.

ஆகையால் தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றி சுமுகமாக தேர்தலை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமெனவும், அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினராயினும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர்
மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )