ரோயல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் ஜனாதிபதி இன்று வாக்களிப்பார் !

ரோயல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் ஜனாதிபதி இன்று வாக்களிப்பார் !

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமாரதிசாநாயக்க எம்.பி. ஆகியோர் முறையே கொழும்பு ரோயல்கல்லூரி, இராஜகிரிய மற்றும் பஞ்சிகாவத்தை வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளை அளிப்பர்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இராஜகிரியவிலுள்ள கொட்டுவேகொட விவேகாராம புராணமஹா விகாரையின் சந்திரலேகா அறநெறி பாடசாலை வாக்களிப்பு நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பஞ்சிகாவத்தையிலுள்ள செய்கோஜி ஆரம்ப பாடசாலை வாக்களிப்பு நிலையத்திலும் தமது வாக்குகளை பதிவு செய்வர்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஹம்பாந்தோட்டை வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்குகளை அளிப்பர்.

திலித் ஜயவீர நுகேகொடை பெங்கிரிவத்தை வாக்களிப்பு நிலையத்திலும் விஜேதாச ராஜபக்ஷ நாவல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள விக்ரமசிங்காராமய
வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்குகளை அளிப்பர்.

மேலும், சரத் பொன்சேகா களனி பிரதேசசபைக்கு அருகிலுள்ள வாக்களிப்பு
நிலையத்திலும் அரியநேத்திரன் மட்டக்களப்பு அம்பிலாந்துறை கலைமகள் வித்
தியாலயத்திலும் தமது வாக்குகளை பதிவு செய்வர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )