நாடு திரும்பிய  இலங்கை கிரிக்கெட் அணி

நாடு திரும்பிய  இலங்கை கிரிக்கெட் அணி

டி20 உலகக் கிண்ண தொடரில் பங்கெடுத்திருந்த இலங்கை அணி வீரர்கள்  இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற இலங்கை  அணி, லீக் சுற்றில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் தோல்வியடைந்தது.

அத்தோடு நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த போதிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று (19) காலை நாடு திரும்பியுள்ளனர்.

அப்போது அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க, “வீரர்கள் சரியாக விளையாடாததால் இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விலக நேரிட்டது அணித் தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “வீரர்களாகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும்.  நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )